மாணவர்களின் கவனத்திற்கு – கல்வி கடன் வாங்க போறீங்களா? உடனே இதை பாருங்க!
12ம் வகுப்பு முடித்து உயர் படிப்புகளுக்காக கல்லூரியில் சேரும் மாணவர்கள் பொதுத்துறை வங்கிகள், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி தங்களது படிப்பு செலவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். புத்தக கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கான கட்டணம், டியூஷன் கட்டணம் என பல்வேறு செலவுகள் இருக்கையில் இந்த கடன் தொகை பயனுள்ளதாக இருந்து வருகிறது.
வங்கிகள் மற்றும் அரசாங்க திட்டங்கள் மருத்துவம், பொறியியல் அல்லது மேலாண்மை போன்ற குறிப்பிட்ட படிப்புகளுக்கு ஏற்றவாறு கடன்கல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கடனளிப்பவரை பொறுத்து 8.5% முதல் 16% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகள் பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களுக்கு கடன் வழங்குகின்றன. கடன் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு முன் அதில் உள்ள அனைத்து செலவுகளையும் புரிந்துகொள்வதற்கு முன் அதைப் பற்றி தெளிவாக படிப்பது முக்கியம்.

























