தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு எப்போது ???
இந்தியாவில் NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆனது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும். இந்த தேர்வானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தேர்வு முடிவுகளானது வருடந்தோரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.
அதேபோல் கடந்த 2019 ஆம் வருடமும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வானது டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடத்தப்பட்டது. வழக்கம் போல் மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று வைரஸ் பரவியதால் மார்ச் முதலே ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன . இதன் காரணமாக NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தேர்வு முடிந்து 6 மாதங்கள் வரை ஆகியும் இன்னும் முடிவுகள் வெளியிடப்படாததால் அதனை வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேசிய திறனறி தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 12 ஆம் வகுப்பு முடிய ரூ. 48000 வரை உதவித்தொகை பெற்றுக் கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தவும், வாழ்வியலுக்கும் இது பேருதவியாக இருக்கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |