20 மாவட்டங்களில் இணைய தொடர்பு ரத்து, ரயில்கள் இயக்கம் நிறுத்தம் – மாநில அரசு அதிரடி!
இந்திய ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம்
இந்தியாவில் அக்னிபாத் எனப்படும் ஆயுதப் படைகளின் மூன்று சேவைகளில் இந்திய இளைஞர்கள் பணியாற்றுவதற்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு கடந்த ஜூன் 14 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அக்னிபாத் என்பது ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளை சேர்ப்பதற்கான ஆட்சேர்ப்பு திட்டமாகும். இந்த திட்டம் இளைஞர்களுக்கு ஆயுதப்படைகளின் வழக்கமான கேடரில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அக்னிவீரர்கள், பயிற்சிக் காலம் உட்பட 4 ஆண்டுகள் சேவைக் காலத்திற்கு பதிவு செய்யப்படுவார்கள். அந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 25 சதவீத அக்னிவீரர்கள் மட்டுமே தகுதி, விருப்பம் மற்றும் மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கமான கேடரில் தக்கவைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்வுக்குறியாக்குவதாக கருதிய மக்கள் பலரும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்த வகையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பீகாரின் 20 மாவட்டங்களில் தற்போது இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில், புதிய ‘அக்னிபத்’ இராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து சில அமைப்புகள் பாரத் பந்த் எனப்படும் நாடு தழுவிய பணிநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பாரத் பந்த் அழைப்பைக் கருத்தில் கொண்டு, பீகார் அரசாங்கம் இன்று (ஜூன் 20) முதல் 20 மாவட்டங்களில் இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. மேலும், கர்நாடகா, ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஒரே ஒருவர், கணிதத்தில் 1858 பேர் – 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதமடித்து சாதித்த மாணவர்கள்!
தொடர்ந்து பஞ்சாபில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சில அமைப்புகள் பாரத் பந்த் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜலந்தர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாரத் பந்த்தை முன்னிட்டு பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மறு உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று சென்னை கோட்ட பிஆர்ஓ தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு விண்ணப்ப பதிவு ஜூலை முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.