தமிழகத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே
தமிழகத்தில் வருகிற நவ. 26 ஆம் தேதி தீபத் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப விழா நடைபெறும். இந்த தீப விழாவின் சிறப்பாக 2668 அடி உயர மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். அந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் டிச.2 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – நீங்களும் கலந்துக்கோங்க!!
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலை மெமு ரயில் (வண்டி எண்06127) நாளையும், நாளை மறு தினமும் (25, 26ம் தேதிகள்) இயக்கப்படுகிறது. நாளை இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை செல்லும், மறு மார்க்கத்தில் திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மென்ட் ரயிலாக (வண்டி எண் 06128) நாளை மறுநாள் (26ம்தேதி) மற்றும் 27ம்தேதி ஆகிய நாட்களில் இயங்கும். திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடையும். இந்த ரயில், வண்டி எண் 06034 ஆக வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் வரை இயக்கப்படும்.