தமிழகத்தில் 2022 பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 13 முதல் ரயில்கள் இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று குறைய ஆரம்பித்ததும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயங்க தொடங்கியது. ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவில்லா ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் ஒரு சில முக்கிய வழித்தட ரயில்களில் மட்டும் முன்பதில்லா ரயில்கள் இயக்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்!
அதனை தொடர்ந்து சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் – காட்பாடி – சேலம் – கோவை வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் வெளியூர்களில் வேலை செய்யும் பணியாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வர்.
Airtel பயனர்கள் கவனத்திற்கு – சேவைகளை அறிவது எப்படி? முழு விபரம் இதோ!
இவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே போல 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அந்தர்வாகியில் 2022 ஜனவரி 13 இல் தாம்பரத்தில் இருந்து இரவு 09.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.