திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – சிறப்பு திட்டம் மீண்டும் அமல்!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் - சிறப்பு திட்டம் மீண்டும் அமல்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் - சிறப்பு திட்டம் மீண்டும் அமல்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – சிறப்பு திட்டம் மீண்டும் அமல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையுடன் பெற்றோர்கள் குறுகிய தொலைவில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யும் விதமாக சிறப்பு நுழைவு தரிசனத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழை கொண்டு வரவேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு தரிசனம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

சிறப்பு நுழைவு தரிசன திட்டம்:

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர் . மேலும் ஜனவரி மாதம் கொரோனா 3 வது அலை வேகம் எடுக்க தொடங்கிய போதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியிருந்தது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ், பள்ளிகள் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

பின்னர் கொரோனா படிப்படியாக குறையத் தொடங்கிய பின்னர், இந்த விதிமுறைகள் எல்லாம் திரும்ப பெறப்பட்டன. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வரிசையில் காத்திருப்போருக்கு பால், சிற்றுண்டி போன்றவை வழங்குங்கள் என ஊழியர்களுக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குழந்தையுடன் பெற்றோர் செல்ல சிறப்பு நுழைவு தரிசன திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள சுபதம் நுழைவாயில் வழியாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுடன் பெற்றோர் இலவசமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த திட்டம் நேற்று முதல் அமலானது.

1. சுபதம் நுழைவு வாயிலில் சரிபார்ப்பின் போது குழந்தையின் வயதை உறுதிப்படுத்த பெற்றோர்கள் பிறப்புச்சான்று அல்லது ஏதேனும் அரசாங்க அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும்.

2. இந்த தரிசனத்திற்கு குழந்தையின் பாதுகாவலர் அல்லது உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தைகளுடன் பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

3. குழந்தையுடன் 12 வயதிற்குட்பட்ட சொந்த சகோதரர் அல்லது சகோதரிகள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

4. இந்த தரிசனத்திற்கு டிக்கெட் இல்லை. பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இலவசம்.

5. சுபதம் நுழைவு வாயில் வைகுண்டம் வரிசை வளாகத்திலிருந்து 100 முதல் 200 அடி தொலைவில் உள்ளது. இங்கு குழந்தைகள் வரிசையில் தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

6. பெற்றோர்கள் புடவை, துப்பட்டாவுடன் பஞ்சாபி ஆடை, ஆண்கள் வேட்டி சட்டை, குர்தா – பைஜாமா ஆகிய ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!