அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இதை செய்தால் 5 மாதங்களுக்கு பொருட்கள் இலவசம்?
மத்திய அரசு தரும் பல வகையான ரேஷன் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு பயனர்கள் தங்களது ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதற்கான எளிய ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிமுறைகளை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் சேவைகள்
இந்தியா முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘ஒரே கார்டு, ஒரே நாடு’ திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரேயொரு ரேஷன் கார்டு மூலம் பயனர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலும், எந்த மாவட்டத்திலும், மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்கிடையில் கொரோனா நோய்த் தொற்றின் போது, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஏனென்றால் கொரோனா காலத்தில் மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – சிறப்பு திட்டம் மீண்டும் அமல்!
இந்த சூழ்நிலையில் வேலையில்லாத மக்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. இப்போது அரசின் அறிவிப்பின்படி, இந்தத் திட்டம் செப்டம்பர் 2022 வரை தொடர இருக்கிறது. இந்த இலவச சேவையை பயனர்கள் பெற்று அனுபவிக்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டைகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சில பல காரணங்களால் அவற்றை ஆதாருடன் இணைக்க முடியாமல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த செயல்முறையை பயனர்கள் இப்போது ஆஃப்லைனிலும், ஆன்லைனிலும் மேற்கொள்ள முடியும்.
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க:
- முதலில் ஆதார் இணையதளமான uidai.gov.inக்கு செல்லவும்.
- அதில், ‘இப்போது தொடங்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் முகவரி மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
- இதற்குப் பிறகு ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிடவும்.
- அதை பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
- நீங்கள் OTP ஐ உள்ளிட்டவுடன், உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
- இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும்.
- பின்னர் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்படும்.
ஆதாரை ஆஃப்லைனில் இணைக்க:
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பு முடிந்ததும் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்படும்.