தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு‌ ஓய்வூதியம் – வலுக்கும் ஆர்ப்பாட்டம்!

0
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு‌ ஓய்வூதியம் - வலுக்கும் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு‌ ஓய்வூதியம் - வலுக்கும் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு‌ ஓய்வூதியம் – வலுக்கும் ஆர்ப்பாட்டம்!

நெல்லை மாவட்டத்தில், சிறப்பு ஓய்வூதியம் 2000 ரூபாய் முறையாக வழங்கப்படாததால் சாப்பிட கூட வழியில்லாமல் தவிப்பதாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியம் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சிறப்பு‌ ஓய்வூதியம்:

தமிழகத்தில் சமீப காலமாக அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அதிகமானோர் பயன் பெற்று வந்தனர். இதற்கிடையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் நிதி சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் மாத மாதம் ஓய்வூதியம் வழங்காமல் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகை மொத்தமாக வழங்கப்படும்.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – PF சம்பள வரம்பு ரூ.21000 ஆயிரமாக உயர்வு?

இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் நலச் சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் 7,850 அகவிலைப்படி வீட்டு வாடகை படி இணைந்து குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என கூறினார். மேலும் வயதான ஊழியர்கள் என்பதால் மருந்து மாத்திரை வாங்க மருத்துவப் படியாக 300 ரூபாய் வழங்க வேண்டும்.

புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

இதையடுத்து பண்டிகை முன்பணம் ரூ. 4000 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகி ஆறுமுகம் கூறியது, சத்துணவு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணமும் மாத இறுதியில் ஊழியர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. இதனால் ஊழியர்கள் உணவு இல்லாமல் கூட கஷ்டபடுகிறார்கள். இந்த 2000 ரூபாய் ஓய்வூதியத்தை வைத்து வாழ முடியாது. எனவே ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என கூறினார். இதை அடுத்து வரும் 21ம் தேதி நடைபெறும் சட்டமன்ற மானியக் கோரிக்கையில் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவதுடன் 30ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!