EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – PF சம்பள வரம்பு ரூ.21000 ஆயிரமாக உயர்வு?
இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு பயனுள்ள வகையில் EPFO நிறுவனம் ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் ரூ.15,000 அடிப்படை சம்பள பெறுபவர்கள் முதல் இணைய வேண்டும். தற்போது இந்த சம்பள வரம்பை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள வரம்பு உயர்வு
இந்தியாவில் அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் EPFO நிறுவனம் சேமித்து வருகிறது. இந்த தொகையுடன் அரசு சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தப்படும். இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும்போது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களின் வயதான காலத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தமிழகத்தில் 2022 ம் நிதியாண்டில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தொழில் துறை அமைச்சர் தகவல்!
மேலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்தால் அவர்களின் கைகளில் கிடைக்கும் சம்பளம் குறையும். ஆனால் முதிர்வு காலத்தில் இது அவர்களுக்கு அதிக லாபத்தை தரும் வகையில் இருக்கும். தற்போது இந்த ஓய்வூதிய திட்டத்தில் ரூ.15,000 அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் முதல் இணைய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இந்த சம்பள வரம்பு கடந்த 2014ம் ஆண்டு அன்று திருத்தம் செய்யப்பட்டது. மேலும் சம்பள வரம்பினை தற்போது உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் கைகளில் குறைவான அளவே சம்பளத் தொகை கிடைக்கும்.
ஆனால் இது எதிர் காலத்தில் அதிக பலன்களை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது இந்த PFக்கான அடிப்படை சம்பள வரம்பு 15000 ஆயிரத்தில் இருந்து ரூ.21000 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக EPFO நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு அரசின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. ஏனெனில் இதற்கு அரசு தனி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே அரசு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த 6,750 கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. இப்போது சம்பள உயர்வு அமல்படுத்தினால் அதற்கும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதனால் இது குறித்த ஆலோசனை மேற்கொண்ட பிறகு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.