சிறப்பு திருமண சான்றிதழ் சட்டம் – உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

0
சிறப்பு திருமண சான்றிதழ் சட்டம் - உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சிறப்பு திருமண சட்டத்தின்படி மதமாற்று சான்றுகளை உள்ளூர் மொழியில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகி உள்ளது.

மதமாற்ற சான்றிதழ்:

இந்தியாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவர்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு புரியும் வகையில் அதனை உள்ளூர் மொழியில் அதனை வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தானாக முன்வந்து மதமாற்றம் செய்கிறார்கள் என்பதற்கான பிரமாண பத்திரத்தை அவர்கள் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பிரமாணப்பத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், அவர்களின் முடிவு அதனால் வரும் விளைவுகள் மற்றும் தாக்கங்கங்களை அறிந்திருக்கிறார் என உறுதி அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் திருமணத்திற்கு பிறகு இரு தரப்பினரின் வயது, திருமணம் செய்யப்பட்டதன் வரலாறு, திருமண நிலை, பிரமாண பத்திரம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!