சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்து சாதாரண மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்து சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சேவையில் மாற்றம்
இந்தியாவில் ரயில் போக்குவரத்து சேவை மிகவும் குறைவான விலையில் வழங்கி வருவதால் இதில் பெரும்பாலோனோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அலுவலகம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல நாள்தோறும் லட்சக்கணக்கான நபர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அதனால் கொரோனா கால கட்டத்தில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அமல்படுத்தியது. இதில் குறிப்பாக பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திருக்க வேண்டும்.
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை தகவல்கள் இதோ!
அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணியாளர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பயணிகளுக்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் தெற்கு ரயில்வே கடந்த மாதம் முதல் அமல்படுத்திய கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. ஆனால் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் போக்குவரத்து சேவையில் மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்தாவது, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 11.59 மணி மற்றும் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வருகிற 19ம் தேதி மற்றும் 20ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மேலும் மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 10.10 மணி மற்றும் 12.40 மணிக்கு கடற்கரை – சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதே போல மதியம் 1.20 மணிக்கு சூலூர்பேட்டை – மூர்மார்கெட் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.