தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூர் கோட்டம் 1961 அப்ரண்டிஸ் சட்டம் கீழ் Trade Apprenticeship பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.apprenticeshipindia.gov.in மூலம் 12.03.2024 முதல் 12.04.2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை |
பணியின் பெயர் | Trade Apprenticeship |
பணியிடங்கள் | 296 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
South East Central Railway காலிப்பணியிடங்கள்:
Trade Apprentice பதவிக்கு என மொத்தம் 296 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
- 10+2 முறையின் கீழ் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2,000 ஊழியர்களை நீக்க பிரபல நிறுவனம் அறிவிப்பு – அதிர்ச்சியில் பணியாளர்கள்!
Apprentice வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள், OBC க்கு 03 ஆண்டுகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD-க்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
South East Central தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் ITI ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 12.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf