கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை, அதிர்ச்சியில் சௌந்தர்யா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா பாரதி இணைந்து சக்தியின் ஆப்ரேஷனை நல்லபடியாக முடித்திருக்கின்றனர். இந்நிலையில் கண்ணம்மா லட்சுமி பாரதியின் பெயர் பலகையில் அப்பா என எழுதி இருப்பதை கண்ணம்மா பார்த்து விடுகிறார். அதனால் அவருக்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல உண்மைகள் வெளியே வர இருக்கும் நேரம் நெருங்கி இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் கதையில் காட்டாமல் கண்ணம்மா பாரதி சக்திக்காக இதயத்தை கொண்டு வந்து சக்தி உயிரை காப்பாற்றியது எல்லாம் சென்ற வார எபிசோடுகளில் காட்டப்பட்டது. தற்போது சக்தி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றப்பட்டு இருக்கின்றாள். இந்நிலையில் கண்ணம்மா 2 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வர அங்கே எல்லா துணிகளும் சிதறி கிடக்கிறது.
Exams Daily Mobile App Download
அதை எல்லாம் மடித்து வைத்த கண்ணம்மா செல்பில் துணிகளை லட்சுமி சிதறி போட்டதை நினைத்து திட்டிக் கொண்டே எடுத்து வைக்கிறார். அப்போது பாரதியின் பெயர் பலகை ஒன்று அங்கே இருக்கிறது. இது எப்படி இங்கே வந்தது இதை எதற்கு லட்சுமி கொண்டு வந்தால் என தெரியாமல் கண்ணம்மா குழப்பத்தில் இருக்க, பெயர் பலகையின் மேலே ஐ லவ் யூ அப்பா என எழுதி இருக்கிறது. அதை பார்த்து கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார்.
லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்தும் இத்தனை நாள் அமைதியாக இருந்ததை நினைத்து கண்ணம்மா வருத்தப்படுகிறார். பின் சௌந்தர்யாவிற்கு வீடியோ கால் செய்து லட்சுமி எழுதி இருப்பதை காட்டுகிறார். அதை பார்த்து சௌந்தர்யா வேணு என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்தும் லட்சுமி அமைதியாக இருப்பதை பார்த்து ஆச்சரியத்தில் இருக்கின்றனர். அடுத்து பாரதி இது பற்றி தெரிந்து கொண்டால் என்ன நினைப்பார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.