ஜன. 30 முதல் இறைச்சி கடைகள் மூடல்.. கவலையில் அசைவ பிரியர்கள் – உத்தரவை வெளியிட்ட பெங்களூரு நிர்வாகம்!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி 13ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமான கண்காட்சி:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எலகங்கா பகுதியில் விமான படை தளம் உள்ளது. இந்த தளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விமான கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் பிற நாட்டு விமான நிறுவனங்களும் பங்கேற்கும். மேலும் கண்காட்சியின் போது விமானம் தொடர்பான சாகச நிகழ்வுகளும் இடம்பெறும். நடப்பு ஆண்டுக்கான “ஏரோ இந்தியா” விமான கண்காட்சி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்க உள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த கண்காட்சியானது தொடர்ந்து 5 நாட்கள் அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 713 விமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முன்னிட்டு பெங்களூருவில் விமான தளத்திலிருந்து சுமார் 10 கி.மீ சுற்றளவில் இருக்கக்கூடிய இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜன.30 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – பராமரிப்பு பணிகள் எதிரொலி!!
இந்த 5 நாட்களும் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளை திறக்கவும் விற்பனை செய்யவும் ஜன. 30ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது விமானப்படை விதி சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.