மின் நுகர்வோருக்கு ஷாக் அறிவிப்பு – வீட்டு உபயோக கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!

0
மின் நுகர்வோருக்கு ஷாக் அறிவிப்பு - வீட்டு உபயோக கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!
மின் நுகர்வோருக்கு ஷாக் அறிவிப்பு - வீட்டு உபயோக கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!
மின் நுகர்வோருக்கு ஷாக் அறிவிப்பு – வீட்டு உபயோக கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தின் விலை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான மின்கட்டணம் உயர்வு கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மின் கட்டண உயர்வு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டதால் இந்தியாவில் டீசல், பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தின் விலை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான உத்தேச மின்கட்டணம் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்த பொதுமக்களிடம் காணொலி வாயிலாக கருத்து கேட்பு நடைபெற்றது. இந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்ட உத்தேச கட்டணத்தையே தீர்மானிக்கப்பட்ட கட்டணமாகும் என்று இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த மின் கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியா்களுக்கு 8 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – தவறாமல் படிங்க!

தற்போது புதுச்சேரியில் இந்த ஆண்டுக்கான மின் கட்டணத்தை பற்றி விரிவாக பார்ப்போம். புதுச்சேரியில் இன்று முதல் மின் கட்டணம் 100 யூனிட்டுகளுக்கு ரூ.1.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.1.55 காசுகளாக இருந்தது. தற்போது 35 பைசா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 101 யூனிட்டுகளில் இருந்து 200 யூனிட்டுகள் வரை இருந்தால் ரூ.2.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.2.60ல் இருந்தது தற்போது 15 பைசா உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 201 யூனிட்டுகளுக்கு மேல் இருந்தால் முன் வசூலிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் வர்த்தக, விவசாய மின்கட்டணங்களிலும் மாற்றம் இல்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!