அரசு ஊழியா்களுக்கு 8 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – தவறாமல் படிங்க!

0
அரசு ஊழியா்களுக்கு 8 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை - தவறாமல் படிங்க!
அரசு ஊழியா்களுக்கு 8 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை - தவறாமல் படிங்க!
அரசு ஊழியா்களுக்கு 8 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – தவறாமல் படிங்க!

புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8 மாத நிலுவை தொகை 7-ஆவது ஊதியக்குழு நிா்ணயித்த ஊதியத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனாலும் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நிதித்துறை அறிவிறுத்தியதால் ஊழியர்களுக்கு இந்த நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி பார்ப்போம்.

நிலுவைத் தொகை:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் ஊழியர்களுக்கான 18 மாத கால நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். இது போன்று பல்வேறு மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இன்னும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. அத்துடன் விரைவில் அகவிலைப்படி உயர்வு , 18 மாத கால நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் அரசு ஊழியர்களுக்கு 3% உயர்வு ஏற்பட்டு 34% அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கியதற்கான தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8 மாத கால நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. மேலும் இதற்கு 7வது ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியத்தின் அடிப்படையில் வழங்கவும் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனாலும் நிலுவைத்தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வருகிற மார்ச் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நிதித்துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து தற்போது ரூ.180 கோடி மதிப்பிலான நிலுவைத்தொகை அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!