
மக்களே..இனிமேல் Calling, SMS-க்கு தனித்தனி ரீசார்ஜ் செய்யணும் ..!! TRAI அமைப்பின் அதிரடி உத்தரவு”..!!
இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அதன் கட்டணங்களை சரிபார்ப்பதற்காக, பாராளுமன்றம் சார்பில் கடந்த 1997 ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) நிறுவப்பட்டது. இந்த ஆணையம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது TRAI அமைப்பானது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் புதிய கட்டளை ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது ஒரு முறை மட்டுமே ரீசார்ஜ் செய்து காலிங் , SMS உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளையும் பெறும் செயல்முறையில் புதிய மாற்றங்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த 30 நாட்களுக்குள் காலிங், SMS போன்ற சேவைகளை தனித்தனியே பெறுவதற்கான ரிசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய அனைத்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் TRAI அமைப்பு உத்தரவிட்டுள்ளது.


























