செப்.21 முதல் ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த மாநில அரசு வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்ததையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்திலும் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 6 லிருந்து 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக நேரடி வகுப்புகள் துவங்கியது.
தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 71.55 லட்சம் பேர் – வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிக்கை!
இந்த வரிசையில் தற்போது 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே, வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரு IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்- ஆய்வு தகவல்!
இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று நிலைமை சீராக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பலாமா அல்லது ஆன்லைன் வகுப்புகளை தொடரலாமா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.