தமிழகத்தில் மீண்டும் சனிக்கிழமைகளில் பள்ளிகள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என்றும், சிறப்பு வகுப்புகள் ஏதும் சனிக்கிழமை நடத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்து, சனிக்கிழமை வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
சனிக்கிழமைகளில் பள்ளிகள்:
கொரோனா கால ஊரடங்கு மற்றும் தொற்று பரவும் அபாயம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்தது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே அனுபவித்து வந்த காரணத்தால், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகள் நேரடி முறையில் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதேபோல், கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால், நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் மாதம் முதல் நேரடி முறையில், செயல்படத் தொடங்கியது. இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் பல மாதங்களாக வீட்டில் இருந்து பழகி விட்டனர். தற்போது தொடர்சியாக பள்ளிக்கு வருவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும், அதனால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும். சனிகிழமைகளில் கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அரசின் உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
IBPS RRB Clerk Prelims மதிப்பெண் அட்டை 2022 – இன்று வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையின் படி, கொரோனா கால தொடர் விடுமுறைகள் காரணமாக மாணவர்கள் கற்றல் இழப்புகளை சந்தித்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பாடத்திட்டங்களை முடிப்பதில் சிக்கல்கள் உள்ளது. இதற்க்கு உதவியாக இருக்கும் வகையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த முடிவை தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்