தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அழகர்கோவில் கள்ளழகா் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தையொட்டி சனிக்கிழமை (ஏப்.16) உள்ளூா் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு:

உலக புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக விவசாயம் செழிக்க வேண்டியும் மழை வேண்டியும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, கள்ளழகர் வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாலை அணிந்து தண்ணீர் பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இதற்காகத் தோல் பைகளை கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் பயன்படுத்துவார்கள். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாகக் கொடியேற்றம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமலும், தேரோட்டம், அம்மன் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள் விழாவாகவும் நடைபெற்றது.

தமிழகத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு வழக்கமான விமரிசனங்களோடு வெகு சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடுவர். இந்த வகையில் இன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தேரோட்டம், பூ பல்லக்கு என அடுத்தடுத்து விழாக்கள் நடைபெறும்.

இதையடுத்து சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளவை ஆகும். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சாா் நிலைக் கருவூலங்கள், வங்கிகள் ஆகியன பொதுமக்கள் மற்றும் அரசு பாதுகாப்பிற்கான அவசரப் பணிகளில் எந்த இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!