பாக்கியலட்சுமி சீரியலில் கையும்,களவுமாக சிக்கிய கோபி – அடுத்து நடக்கும் திருப்பம்!
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாக வரக்கூடிய எல்லா எபிசோடுகளிலும் புது புது திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறது. இந்நிலையில் இன்றய எபிசோடில் நடக்க போகும் நிகழ்வு கோபிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக கோபி கூடிய விரைவில் சிக்குவார் என்பது உறுதியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக ராதிகாவுக்கு உண்மைகள் விரைவில் தெரியவரும் என்றே சொல்லலாம். தொடரில் எழில் மற்றும் தாத்தா என மொத்தம் இரண்டு பேருக்கு மட்டுமே கோபியை பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கும் நிலையில் தற்போது நடக்க உள்ள நிகழ்வால் கோபியில் கில்லாடி லீலைகள் முடிவுக்கு வந்துவிடும் போல் இருக்கிறது.
ராதிகா, கோபியை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து கொண்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
அதாவது, ராதிகா தனது மகள் மயூவின் பிறந்தநாள் நிகழ்வுக்காக கேட்டரிங் ஆர்டரை பாக்யாவிடம் கொடுத்திருந்தார். அந்த நிகழ்வின் மூலமாகவும், சாப்பாட்டை டெலிவரி செய்யும் விதமாகவும் பாக்கியாவிடம் இன்று தனது காதலரை அறிமுகப்படுத்துகிறேன் என ராதிகா கூறியிருந்தார். அதே விஷயத்தை கோபிக்கும் ராதிகா சொல்ல, கோபியும் சுதாரித்து கொண்டு எப்போதும் போல தப்பித்து விட்டார். அப்படி இருந்தும் செல்வி அக்கா அந்த இடத்திற்கு வருகை தர, அவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இப்படி இருக்கையில் இன்றைய எபிசோட்டை குறித்து வெளியான ஒரு ப்ரோமோவில் ராதிகா, கோபியை சர்ப்ரைஸாக பாக்கியாவை காண கூட்டி செல்கிறார். கோபி பலமுறை கேட்டும் சொல்லாத ராதிகா, இறுதியில் பாக்கியா டீச்சரை பார்க்க போறோம் என்று சொன்னதை கேட்டதும் கோபிக்கும் கையும் புரியல, காலும் புரியல. அப்படியே அதிர்ச்சியாகி காரை நிறுத்துகிறார். இதனால் ராதிகாவுக்கு, கோபி மீது சந்தேகம் எழுந்து ‘ நீங்க எந்த காரணம் சொல்லியும் தப்பிக்க முடியாது, இன்னைக்கு டீச்சர பாத்தே ஆகணும்’ என்று அடம்பிடிக்கிறார். அடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.