ராதிகா, கோபியை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து கொண்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
ராதிகா, கோபியை கைது செய்த போலீசார் - உண்மையை அறிந்து கொண்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகா, கோபியை கைது செய்த போலீசார் - உண்மையை அறிந்து கொண்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகா, கோபியை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து கொண்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!

மயூவின் பிறந்தநாளுக்காக பாக்கியா செய்து கொடுத்த சாப்பாட்டில் ராதிகா மற்றும் கோபி தான் விஷத்தை கலந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்யும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போது தான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கூடிய விரைவில் பாக்கியாவினை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கிறார்.

முடிவுக்கு வந்த விஜய் டிவியின் ‘செந்தூரப்பூவே’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

மயூவின் பிறந்தநாளுக்கு ராதிகா 100 பேருக்கு சமைத்து கொடுக்கலாம் என முடிவு செய்கிறார். இதனால் ராதிகாவை தேடி சென்று 100 பேருக்கு சமைத்து கொடுக்குமாறு கூறுகிறார். அப்போது ராதிகாவிடம் செல்வி நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிற உங்களது கணவரை மட்டும் எங்கள் கண்ணில் காட்டவே மாட்டிங்கிறீர்கள் என கூறுகிறார். உடனே ராதிகா மொபைல் போனில் கோபியின் புகைப்படம் ஏதேனும் இருக்கிறதா என தேடுகிறார். ஆனால் கோபியின் புகைப்படம் ஏதும் இல்லாத காரணத்தினால் உங்களுக்கு நேரிலேயே அறிமுகம் செய்து வைக்கிறேன் என கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்.

இதன் பின்பு பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை 100 அனாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் அந்த சாப்பாட்டை மயூ, ராதிகா, கோபி யாருமே சாப்பிடவில்லை. பாக்கியா அவமானப்பட வேண்டும் என நினைத்து இந்த சாப்பாட்டில் கோபி தான் ஏதோ கலந்துவிடுகிறார். விஷம் கலந்த உணவை சமைத்து கொடுத்ததற்காக பாக்கியாவை போலீசார் கைது செய்கின்றனர். இருப்பினும் ராதிகா மற்றும் கோபியின் மீதும் சந்தேகம் இருப்பதால் அவர்களையும் தற்போது கைது செய்யும்படி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!