தமிழகம் முழுவதும் பள்ளிகள் வேலை நேரத்தில் மாற்றம், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 5 ஆண்டு காலத்தில் படிபடியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர் பணி நியமனம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி கடந்த மார்ச் மாதம் ஏப்ரல் வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நடைபெற்றது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கானது 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற் D.T.Ed கல்வி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
TN TET எழுதவுள்ள தேர்வர்கள் கவனத்திற்கு – தயாராகும் முறை & சிலபஸ் பற்றிய முழு விவரம்!
தற்போது விண்ணப்பதிவுகள் முடிவடைந்துள்ளது தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் படிபடியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் திட்டமிட்டபடி 1ம் வகுப்பு முதல் வரும் 13ம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும். அதற்காக பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களை தணிக்கைக்கு உட்படுத்துவது குறித்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பெற்றோரிடம் எந்த தொகையும் வசூலிக்க கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்த புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றுவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.