ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூன் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் ஜூன் 14ம் தேதி முதல் பகுதி வாரியாக ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கைரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்களை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் முகாம்:
இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவரும் ஆதார் அதை உள்ளது. மத்திய அரசால் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆதார் கார்டு நீல நிறத்தில் இருக்கும் இதை பால் ஆதார் எனப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வழங்க பிறப்பு சான்றிதழ் அவசியமாகும். குழந்தைக்கு 5 வயது ஆகும் போது குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். இந்த ஆதார் அட்டை ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை போன்றவற்றை போல முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அனைத்து அரசு, தனியார் நிறுவன வேலைகளுக்கும் மற்றும் தனிநபர் சார்ந்த வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் வேலை நேரத்தில் மாற்றம், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் அறிவிப்பு!
அதனால் இதனை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்ள வேண்டும். முகவரி , பிறந்த தேதி, புகைப்படம் மொபைல் எண் போன்ற விவரங்களை நாம் எளிதாக UIDAI இணையதளம் வாயிலாக மாற்றலாம். புகைப்படம் மாற்றுதல் கைரேகை பதிவு போன்றவைகளை நாம் நேரடியாக ஆதார் சேவை மையத்தில் தான் மாற்ற வேண்டும். அஞ்சலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையங்களில் விவரங்களை மாற்றலாம். தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் 14-ம் தேதி முதல், 17-ம் தேதி வரை சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25வது வார்டு மக்களுக்கு சிறப்பு முகாம் 18 முதல் 21-ந் தேதி வரை, 1, 2, 3, 4, 5, 13 மற்றும் 14 வது வார்டு மக்களுக்கு தாராபுரம் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது. வரும் 26 முதல், 30-ந் தேதி வரை 6, 7, 8 மற்றும் 9 வது வார்டு மக்களுக்கும் ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் கைரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்களை முகாமில் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.