நவம்பர் 8 முதல் 1 – 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!

0
நவம்பர் 8 முதல் 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு!
நவம்பர் 8 முதல் 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு!
நவம்பர் 8 முதல் 1 – 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரியில் நவம்பர் 8ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். மேலும் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் முதல் கட்டமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் கற்றலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் வகுப்புகள் ஆன்லைன் மூலம் தினசரி நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று தீவிரமெடுத்ததால் 2021 – 2022ம் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது. கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கும் முயற்சிகளை மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்டது.

இப்பகுதிகளில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

இதன் விளைவாக தற்போது இந்தியா முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலை கருதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையும் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறக்க தேவையான பணிகளில் ஈடுபட்டது. ஏற்கனவே கடந்த வருடம் கொரோனா அச்சத்தால் 10, 12 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு – பிரபல அரசு வங்கி முக்கிய அறிவிப்பு!

அதேபோல புதுச்சேரியிலும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 – 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக நவம்பர் 8ம் தேதி முதல் 1 – 8 வரையிலான மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் சுய விருப்பத்தின் படி பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம். நகர்ப்புறங்களில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும். கிராமப்புறங்களில் வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!