தமிழகத்தில் SSC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இலவச பயிற்சி நாளை தொடக்கம்!
தமிழகத்தில் SSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இலவச போட்டித்தேர்வு பயிற்சி:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி பல்வேறு தேர்வுப் பணியிடங்களுக்கு தகுதியான 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் தேர்வை நடத்துகிறது. மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களின் பங்கு சற்று குறைந்து காணப்படுகிறது. அதனால் கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் நலன் கருதி அரசு சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 8 முதல் 1 – 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!
அதன் அடிப்படையில் 3,261 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த அக்.28ம் தேதி முடிவடைந்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது எஸ்எஸ்சி (பணியாளர் தேர்வாணையம்) நடத்தவுள்ள பட்டப்படிப்பு தகுதியான போட்டித் தேர்வுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பகுதிகளில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
பயிற்சியின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 94999-66028 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி பயிற்சியில் சேரலாம் என்று தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.