தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது?

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த வகையில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு எப்போது:

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் கடந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் குறைய தொடங்கியது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. இந்த அரசாணைபடி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு தரப்பிலிருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடப்பு ஆண்டு பொதுதேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என உறுதி அளித்தார். இதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டார்.

பெங்களூரில் மார்ச் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!

இந்த அட்டவணை படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பாடங்களை விரைவாக முடிக்க வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதன் படி 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும் பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணையை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!