ஜனவரி 15 வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் குஷி!
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்ற நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் வரும் ஜனவரி 15 வரை பள்ளி மாணவர்களுக்கு குளிர் கால விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் குஷி:
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பெற்றோர்கள் கவலையின்றி மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் ஜன.2ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு – அரசு அறிவிப்பு!
இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த ஆண்டில் மட்டும் 113 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
உத்தர பிரதேசத்தில் வருடந்தோறும் குளிர்கால விடுமுறையும் , கோடை கால விடுமு றையும் அளிக்கப்படும். தற்போது குளிர்கால விடுமுறை அறிவித்ததோடு 2022 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனை தொடரந்து இந்தியாவில் புதிதாக பரவி வரும் கொரோனாவின் புது உருவமான ஓமைக்ரான் தொற்றால் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.