1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு ஆலோசனை!!
கர்நாடகாவில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு ஆலோசனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் இன்றி தேர்ச்சி
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலத்தில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க ஆலோசனை நடந்து வருகிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் அளித்துள்ள பேட்டியில், ‘ஒன்று முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க ஆலோசனை செய்து வருகிறோம்.
முன்னதாக கல்வித்துறை அமைச்சருடன் இதுகுறித்து ஆலோசனை நடந்துள்ளது. தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் திங்கள்கிழமை நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடகா மாநிலத்தில் 4 வாரங்களுக்கு முன்னாக 300 என இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மக்களை கர்நாடகா எல்லைப்பகுதிகளில் வைத்து பரிசோதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு – மத்திய அரசு திட்டம்?
முதலமைச்சரின் உத்தரவிற்கு பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாநில எல்லைகளை அடைக்க கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் முதல் 7, 8 வாரங்கள் வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை ஆலோசனை செய்து வருகிறோம்’ என பேசினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்