1 முதல் 5ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் சில தினங்களாக கொரோனா பரவல் ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளி தேர்வுகள்:
கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது நாட்டில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்துள்ளனர். அதன் படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
மீண்டும் முழு நேர ஊரடங்கு? இன்று இரவு முதல்வர் உரை!!
மேலும் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் திறனுக்கேற்ப மற்றும் பள்ளி நாட்களில் நடத்திய யூனிட் தேர்வுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஓரல் தேர்வு நடத்த அந்த மாநிலத்தின் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மாநிலத்தில் பல பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளிகளில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.