மீண்டும் முழு நேர ஊரடங்கு? இன்று இரவு முதல்வர் உரை!!
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டை போல் மிக வேகமாக கொரோனா அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தற்போது மராட்டியத்தில் மாநில முதல்வர் உரையாற்றவுள்ளார்.
மராட்டியம்:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மிக அதிகமாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு நாளடைவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்தது. இதன் காரணமாக நாட்டில் அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தின் புனே பகுதியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது மராட்டிய மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் மீண்டும் மராட்டியத்தில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்று தொடர்ந்து வினவப்படுகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனையை நடத்தினார். தற்போது இது குறித்து முதல்வர் இன்று இரவு 8.30 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்