மாணவர்களுக்கு ரூ.1,00,000/- உதவித்தொகை – முழுசா தெரிஞ்சுக்க இதை பாருங்க!
தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுவைத்து குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், 5ம் வகுப்பு வரை 2,000, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 6,000, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 8,000, பட்டப்படிப்புக்கு 12,000, முதுகலை பட்டத்திற்கு 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டத்தின் கீழ், பிஎச்டி., படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 50 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் – முழு விவரங்களுடன்!
மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிறப்புக் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஆராய்ச்சி படிப்பு பி.எச்டி. மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.1,00,000 வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50,00,000 நிதி ஒதுக்கீட்டில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் (Chief Minister’s Research Fellowship)செயல்படுத்தப்படும் என மாற்றுத்திறனானிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் கூறியுள்ளார்.























