உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவற விட்டுட்டீங்களா? தமிழக மாணவர்களுக்கான மற்றொரு அரிய வாய்ப்பு!
தமிழக சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவி தொகை:
பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கல்வி உதவி தொகை வழங்குவது போன்ற திட்டங்களால் வறுமை காரணமாக இடை நிற்க வேண்டிய சூழலில் உள்ள மாணவர்கள் பயனடைவார்கள். இதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முறையாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், மத்திய அரசின் சிறுபான்மை இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு பள்ளி கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் பேகம் ஹசரத்மஹால் உதவி தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
ஐடி ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து – அதிரடி பணி நீக்கம்! முன்னணி நிறுவனத்தின் நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
2021-2022ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற மாணவர்கள் www.scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த உதவித்தொகையினை பெற விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையும் வகையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் அதிக தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now