தனது கணவரை பிரிகிறாரா சமந்தா? திருமண உறவில் விரிசல்? ஓபன் டாக்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் பிரிய இருக்கின்றனர் என்ற செய்திக்கு தற்போது சமந்தா காட்டமான பதில் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழி திரைப்படங்களில் தற்போது வரை நடித்து வருபவர் தான், சமந்தா. திருமணம் முடிந்ததும் அனைத்து நடிகைகளும் திரைத்துறைக்கு முழுக்கு போட்டு தங்களது குடும்பத்தினை கவனிக்க சென்று விடுவர். ஆனால், இதற்கு நேர்மாறாக சமந்தா திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் சமூகவலைத்தளமான இன்ஸ்டாக்ராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா அஞ்சலியின் பளபள முகத்திற்கான சீக்ரெட் – அவரே சொன்ன தகவல்!
தமிழில் “காத்துவாக்குல ரென்டு காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என இருந்த பெயரை வெறுமனே S என்று மாற்றினார். இதனால் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வதந்திகள் வெளி வந்தும் சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்த செய்திக்கு சமந்தா தற்போது காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘என்னை பற்றி பரவலாக பல வதந்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் பதில் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதற்கு பதில் அளிக்க வேண்டுமோ அதற்கு மட்டுமே நான் பதில் அளிப்பேன். நாக சைதன்யா மிகவும் அமைதியானவர். பதட்டமான நிலையில் கூட அமைதியாக இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.