பாரதி கண்ணம்மா அஞ்சலியின் பளபள முகத்திற்கான சீக்ரெட் – அவரே சொன்ன தகவல்!
பெண்கள் அனைவரும் விரும்புவது மாசு மாரு இல்லாத அழகாக முகத்தினை தான். அதற்காக பலரும் மெனக்கெடுகின்றனர். அதற்கான சில ஈஸி டிப்ஸுகளை “பாரதி கண்ணம்மா” சீரியலின் நடிகை கண்மணி அனைவருக்கும் வெளியிட்டுள்ளார்.
சருமத்திற்கான டிப்ஸ்
அனைவருமே விரும்புவது கிளியர் சருமத்தினை தான். இதற்காக பலர் பார்லர் மற்றும் கெமிக்கல் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் சீரியல் மற்றும் சினிமாக்களில் ஹீரோயினிகள் பயன்படுத்துவது போல பல ரூபாய் செலவழித்து முக அழகினை பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கண்மணி. இவர் அந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அழகாக பார்பி டால் போல இருக்கும் இவருக்கு பல ரசிகைகள் இருக்கின்றனர்.
விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” போட்டியில் இன்று வெளியேறப் போவது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!
தான் இப்படி இருப்பதற்கு தான் பின்பற்றும் சில இயற்கை முறைகளே காரணம் என்று கூறுகிறார். இவர் அவ்வளவாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த மாட்டாராம். அவரது ஹாண்ட் பாகில் எப்போதுமே சன்ஸ்கிரிம் லோஷன் வைத்திருப்பாராம். அதே போல் வெளியே சென்று விட்டு வந்தால் தயிரினை கொண்டு தனது முகத்தினை மசாஜ் செய்வாராம்.
இதனால் தான் இவரது முகம் மேக்அப் இல்லாமல் கூட அழகாக இருக்கிறதாம். ட்ரை ஸ்கின் இருக்கும் பலருக்கு இவர் பரிந்துரைப்பது இந்த முறையை தான். இதனை பயன்படுத்தினால் முகம் சட்டென்று பளிச் என்று மாறி விடுமாம். அதே போல் வைட்டமின் சி இருக்கும் பியூட்டி பொராடக்டுகளை தான் யூஸ் செய்வாராம். இதனை அனைவருமே பயன்படுத்தலாம் என்று இவர் பரிந்துரைக்கிறார்.