TCS ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 6 முதல் 8 சதவீதம் வரை சம்பள உயர்வு!
TCS நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் மட்டுமே மொத்தமாக 6 முதல் 8 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் மேலும் அதிகரிக்கக்கூடும் என TCS நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
TCS நிறுவன ஊழியர்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக பல ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற தொடங்கியுள்ளனர். மேலும், கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே புதிதாக எந்த அட்மிஷனும் நடத்தவில்லை. இந்தாண்டு அட்மிஷன் வீதமும் அதிகரிக்கப் போவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தமிழக அரசில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – TNPSC குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதற்கு பிறகு அடுத்த நிதி ஆண்டின் நடுப்பகுதியில் அட்மிசன் குறையத் தொடங்கலாம் எனவும் கூறியுள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரிகள் மட்டும் வாரத்துக்கு மூன்று நாட்கள் அலுவலகங்களுக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பல ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வர இருக்கிறார்கள் எனவும் அறிவித்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் இந்த நிதியாண்டில் TCS ஊழியர்களுக்கு 6 முதல் 8 சதவீதம் சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விகிதம் அடுத்த நிதியாண்டில் இன்னும் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர். கடந்த 4வது காலாண்டில் மட்டுமே 35 ஆயிரத்து 209 ஊழியர்களை புதிதாக பணியமர்த்தி உள்ளனர். எந்த நிதியாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தான் அதிக அளவில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். NSE-யில் பங்கின் விலை 0.99% அதிகரித்து 3733 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3004 ரூபாயாகும். BSE-யில் பங்கின் விலை 0.93% அதிகரித்து 3650.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 3004.80 ரூபாயாகும்.