தமிழக அரசில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – TNPSC குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - TNPSC குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - TNPSC குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – TNPSC குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில், அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் நிதி முக்கியதுவம் என்றாலும், மனிதவளமும் முக்கியம் என்று கருதி முதலமைச்சர் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய தகவல்:

இந்த மாதம் 6ம் தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறைக்கு பின் சட்டசபை நேற்று மீண்டும் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை மீதான விவாதம் நடைபெற்றது.

Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அப்போது கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் இது குறித்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு நிபுணர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்று முடிந்துள்ளாகவும் அவர் தெரிவித்தார்.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 2972 காலிப்பணியிடங்கள்!

கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் கடந்த 2 வருடங்களாக போட்டி தேர்வுகளுக்காக காத்திருந்தவர்கள் உற்சாகமாக தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப குழு 6 மாதத்தில் பரிந்துரைகளை தரவும் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆய்வு முடியும் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படும் என்று கூறினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!