சென்னை மாநகராட்சி வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை!
சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் இந்த ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் செலுத்தத் தவறினால் 2% அபராத தொகை வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்து வரி:
சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் இந்த நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரியை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாநகராட்சிக்கு இதுவரை செலுத்திவந்த விகிதத்திலேயே இந்த சொத்து வரியையும் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் கோடை விடுமுறை தொடக்கம் – கல்வித்துறை அறிவிப்பு!
இது மட்டுமல்லாமல் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை செலுத்த தவறினால் 2% அபராத தொகையும் வசூலிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுசீராய்வுக்கு பிறகு சொத்துவரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக சொத்துவரி பற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – TNPSC குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மண்டல அலுவலர்கள் வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக மாநகராட்சி வரி வசூலிப்பவர்கள் மற்றும் உரிமை ஆய்வாளர்கள் மூலமும் வரியை செலுத்தலாம். சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடர்பாக மன்றத் தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும். எனவே சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் விரைவில் சொத்து வரியை செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.