100 நாள் வேலை திட்டம்.. ஊதியம் அதிரடி உயர்வு – மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு கிராம திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
100 நாள் வேலை திட்டம்:
இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறும் நடைபெற்று வரும் நிலையில் அதற்கான பல்வேறு விதிமுறைகளும் அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக ஒரு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வரும் கிராமத்திட்ட ஊழியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
அனைத்து பள்ளிகளில் ஒரே கல்வித்திட்டம் வேண்டும்.. மாநில அரசிடம் கோரிக்கை!
இந்நிலையில், கிராம திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராம திட்ட ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம திட்ட ஊழியர்கள் அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் இணைப்பு சங்கங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதையொட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.