மேடையில் ரசிகர்கள் முன் கண்ணீர் விட்டு அழுத நடிகை சாய் பல்லவி – காரணம் இதுவா!
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் சமீபத்தில் மேடை ஒன்றில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கி இருக்கிறார்.
நடிகை சாய் பல்லவி:
தமிழ் திரைத்திரையில் மலர் டீச்சர் என்று சொன்னாலே நினைவுக்கு வரும் அளவிற்கு அந்த படத்தில் கதாபாத்திரமாகவே மாறியவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஒரு டான்சரும் கூட விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா? என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதில் அவர் நினைத்த அளவிற்கு பிரபலமாகவில்லை. பின் தமிழில் மாரி 2, NGK என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
திருவாரூரில் டிச.26ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100+ தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
பின் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக அதிகமான ரசிகர்களை பெற்றார். 2018-ம் ஆண்டு தியா படத்தில் நடித்து தமிழில் சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல வெற்றி படங்களில் அவர் நடித்திருக்கிறார். இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர். இவருக்கு ஒரு இரட்டை சகோதரியும் இருக்கிறார்.
சென்னை சி.எம்.டி.ஏ குழுமத்தில் வேலைவாய்ப்பு – ஜன.13 விண்ணப்பிக்க கடைசி நாள்!
தற்போது சாய் பல்லவி நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மேடை ஏறி சாய் பல்லவி வரும் பொது ரசிகர்கள் அவர் நடித்த கதாபாத்திரங்களின் பெயரை சொல்லி கோஷமிட்டனர். அதை பார்த்து சாய் பல்லவி கண்ணீருடன் நன்றி சொன்னார். ரசிகர்கள் அன்பு தனக்கு கிடைக்க கடவுள் தான் காரணம் என எமோஷனலுடன் பேசி இருக்கிறார்.