14 மணி நேரத்திற்கு RTGS சேவைகள் இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும் ஏப்ரல் 18ம் தேதி அன்று 14 மணி நேரத்திற்கு ஆர்டிஜிஎஸ் (RTGS) பண பரிவர்த்தனை சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
RTGS சேவைகள்:
தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிவர்த்தனைகள் என்பது எளிதாகி விட்டது. இதன்படி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் எளிதான முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு நெஃப்ட் (NEFT) அல்லது ஆர்டிஜிஎஸ் (RTGS) உள்ளிட்ட சேவைகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. விடுமுறை நாட்களிலும் ஆர்டிஜிஎஸ் போன்ற சேவைகள் மூலம் பரிவர்த்தனைகள் செய்வது எளிதாக இருப்பதால் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கூடுதலாக நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் சேவைகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பு என்பதால் மக்கள் அந்த சேவைகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறும் காரணத்தால் ஆர்டிஜிஎஸ் சேவைகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டு பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதிநேர ஊரடங்கு – துணை நிலை ஆளுநர் எச்சரிக்கை!!
தொடர்ந்து பரிவர்த்தனைக்கு நெப்ட் சேவைகள் தடையில்லாமல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்டிஜிஎஸ் சேவையானது வங்கி வேலை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டது. பின்னர் இந்த சேவைகள் 24 மணிநேரமாக கூட்டப்பட்டது. இந்த ஆர்டிஜிஎஸ் சேவைகள் மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.