
ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கை – அக்டோபர் 17க்குள் நிறைவேற்ற உத்தரவு! கட்டணத்தை திருப்பி வழங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, RTE (Right to Education) திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை செயல்முறையை அக்டோபர் 17க்குள் முடிக்க அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் தவறுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக திருப்பி வழங்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலையில் கல்லூரி துவங்க வேண்டும்: மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, RTE சட்டத்தின் படி பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் இலவசக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளனர். இதனை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் சேர்க்கை பெறுவதற்காக மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வை மேற்கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

























