அரசு வழங்கும் உதவித்தொகை ரூ.500 உயர்வு – கவர்னர் ஒப்புதல்!
அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி வழங்க புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
உதவித்தொகை:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அவ்வப்போது அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் மிக கவனம் தேவை – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!
40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500, 60 வயதுக்கு மேல் 79 வயது வரை உள்ள நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,200 மற்றும் 80 வயதை கடந்த நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,300 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவித் தொகையை அதிகரிப்பதற்காக, மாற்றுத்திறனாளிகள் நிதியுதவிக்கான விதிகளில் திருத்தம் செய்யும் சமூக நலத்துறையின் வரைவுக்கு புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயதுக்கு மேல் 79 வயது வரை உள்ள நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,200-ல் இருந்து ரூ.2,700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதை கடந்த நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.3,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.