IND vs AUS 2024 -25 : ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வருகிறார். மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பார்டர் கவாஸ்கர் டிராபி” (BGT) 2024-ல் சரியாக விளையாடாத நிலையில் சமூக வளையதளங்களில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளனர். இந்நிலையில் ரோஹித் சர்மா T20 போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மெல்போர்னில் நடைபெற்ற BGT 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. மேலும், அவர் அணியை வழிநடத்திய 6 போட்டிகளில் இந்தியா வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, மோசமான பார்ம் மற்றும் அவரது கேப்டன்சியின் கீழ் அணியின் தோல்வி போன்றவற்றை கருத்தில் கொண்டு 2025 ஆண்டு நடக்கவிருக்கும் போட்டிக்கு பின்னர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தேதியை அறிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது.


























