மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – தமிழக சட்டப்பேரவையில் அதிரடி!
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானத்தை அமல்படுத்தி உள்ளது. இதனை எதிர்த்து பாஜக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தீர்மானம் நிறைவேற்றம்:
மத்திய அரசானது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்களை கொண்டு வந்து குடியரசுத் தலைவரின் அனுமதியோடு அதை சட்டமாக்கியது. இதை எதிர்த்து கடந்த 10 மாதத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு அங்குள்ள மைதானத்தில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தீர்க்கும் விதமாக வேளாண் சங்க நிர்வாகிகளுடன் அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இந்த சட்டத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம் – இதுதான் காரணம்! மாநகராட்சி விளக்கம்!
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பு வழிமுறைகள் உடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் பல்வேறு துறை ரீதியான விவாதங்கள் எழுப்பப்பட்டு, துறை சார்ந்த அமைச்சர்களின் முக்கிய அறிவிப்புகள் உடன் நிறைவடைந்து வருகிறது. இந்த நிலையில், இன்றைக்கு வேளாண் மற்றும் பொதுப்பணித்துறை சார்பான விவாதங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தகுந்தது.
TN Job “FB Group” Join Now
இதில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு கொண்டு வந்த இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, மாநிலங்களுடன் ஆலோசனை செய்யாமல் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களுக்கு அடுத்து தமிழகமும் தீர்மானம் கொண்டு வந்திருப்பது சொல்ல தகுந்தது.