தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு TET லிருந்து விலக்கு அளிக்க உதவ வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
முதல்வருக்கு கோரிக்கை:
திருவாரூர் உட்பட தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல பாரபட்சம் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TET லிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் 23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் பல ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழகத்தில் வெளிவந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது. ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பாக தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் செயல்முறைகள் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளன. இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாகவும், அரசு உத்தரவு வாயிலாகவும் பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.
ஏப்ரல் மாதத்தில் 9 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!
அவர்களில் 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள், 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள், அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன. தற்போது மிகக் குறைந்த அளவிலான TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர். இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர். இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே முதல்வரின் கருணை பார்வையை எதிர்பார்த்து உள்ளோம் என மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.