Reliance Jio, Airtel நிறுவனங்களின் அதிரடி ரீசார்ஜ் ஆபர் – பயனர்கள் கவனத்திற்கு!
ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்களது வடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நன்மைகளை அளிக்கிறது. அதன்படி 450 ரூபாய்க்குள் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை இப்பதிவில் காண்போம்.
ரீசார்ஜ் பிளான்:
கொரோனா பரவல் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் வீட்டிலிருந்து போன் மூலம் இணையம் பயன்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கியது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நெட்ஒர்க் நிறுவனங்கள் அதிக சலுகைகளையும் இலவச டேட்டாக்களையும் வழங்கியது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 450 ரூபாய்க்குள் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? DA, DR மீண்டும் அதிகரிப்பு?
ஜியோவின் 349 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற கால் ஆகியவற்றை அளிக்கிறது. மேலும் ஜியோ டிவி போன்ற ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஜியோவின் 401 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் தினமும் 3 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி க்கு இலவச சந்தா ஆகியவற்றை 28 நாட்களுக்கு அளிக்கிறது.
TN Job “FB Group” Join Now
ஏர்டெல் 448 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் நாட்டின் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு ஆகிய வசதிகளை வழங்குகிறது. இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியங்களை அளிக்கிறது.
ஏர்டெல் 398 ரூபாய் திட்டம் 3 ஜிபி டேட்டா தினமும் 100 எஸ்எம்எஸ் அமேசான் பிரைம் வீடியோ போன்றவற்றை 28 நாட்களுக்கு அளிக்கிறது.