மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? DA, DR மீண்டும் அதிகரிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? DA, DR மீண்டும் அதிகரிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? DA, DR மீண்டும் அதிகரிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? DA, DR மீண்டும் அதிகரிப்பு?

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான DA மற்றும் DR நிவாரணத்தை சுமார் 11% அதிகரித்து அறிவித்தது. இதையடுத்து அகவிலைப்படி தொகையை மேலும் 3 சதவிகிதம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) தொகையானது கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு அகவிலைப்படி தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் 17 சதவீதமாக கொடுக்கப்பட்டு வந்த DA தொகையை உயர்த்தி 28 சதவிகிதமாக கொடுக்கப்பட்டது. இது கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.

T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில் அகவிலைப்படி தொகையை மேலும் 3 சதவிகிதம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை மையம் கவனித்து வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சில நிபுணர்களின் கூற்றுப்படி, அது விரைவில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த வகையில் DA உயர்வு ஏற்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுடன் சேர்த்து இவை 31 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 28 சதவிகிதம் DA உயர்த்தப்பட்டதன் விளைவாக, 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அதன் படி ஊதியத்தில் அடுத்த அதிகரிப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில், மத்திய அரசு ஊழியர்கள் பெறும் 31 சதவீத DA உயர்வு இதுவாகும். இதனிடையே அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான DA உயர்வை சில மாநிலங்கள் உறுதி செய்துள்ளது. அதன்படி உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 28 சதவிகித DA உயர்வை அமல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள், 16 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.

TN Job “FB  Group” Join Now

அடுத்ததாக ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முந்தைய எண்ணிக்கையிலிருந்து 17 சதவிகித DA உயர்வு பெறுவதாக உறுதியளித்தத. இந்த எண்ணிக்கை 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. ஜார்க்கண்ட் மாநில அரசும் மையத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, 28 சதவீதமாக DA வை உயர்த்தியுள்ளது. இந்த 11 சதவீத உயர்வு அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கிறது. ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கான DA, 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இப்போது ஊழியர்கள் 28 சதவீத DA பயனை அனுபவிக்க முடியும். இவை மேலும் 3 சதவிகிதம் உயர வாய்ப்புள்ளது. கர்நாடகா அரசு ஊழியர்களின் DA வை 21.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் முந்தைய 17 சதவிகிதத்தை விட 28 சதவிகித DA உயர்வை எதிர்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவை 2 சதவீதம் வரை அதிகரிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்தது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான DA அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அதிகரிப்பு 11 சதவீத உயர்வாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!