வங்கியிடம் வாங்கிய கடனுக்கு EMI கட்டாதவரா நீங்கள்..?? அப்போ உடனே இதை செய்யுங்க..!!
எதிர்பாராத சூழலில் ஏதேனும் நிதிப் பிரச்சனைகள் ஏற்பட்டால் பலர் கடனுதவி நாடி வங்கியை அணுகுகின்றனர். அதில் குறிப்பாக மக்கள் தனிநபர் கடன் தேர்வு செய்து எங்கே குறைவான வட்டி இருக்கிறதோ, அங்கே கடன் பெறுகின்றனர். மேலும், அதற்கான EMI மாதந்தோறும் செலுத்த வேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்தின் நிதி பிரச்சனையால் கடன் தொகைக்கான EMI செலுத்த தவறும்போது எழும் பிரச்சனைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. சித்திரை திருவிழா முன்னிட்டு வெளியான முக்கிய தகவல்..!!
அதாவது, வாங்கிய கடனுக்கான மாதந்திரா EMI செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளரின் CIBIL மற்றும் கிரெடிட் ஸ்கோர் மேம்படும். மேலும், ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி “கடனுக்கான EMI செலுத்தாதவர்களை யாரும் வங்கி அதிகாரிகள் அழைத்து மிரட்டக் கூடாது என்றும், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று EMI கட்ட பட்சத்தில் நோட்டீஸ் அனுப்புவதைத் தாண்டி கடன் வசூலிப்பவர்கள் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், பணம் செலுத்தாத பட்சத்தில் அவர்கள் அடகு வைத்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு முன்பாக தொடர்பு கொண்டு ஒப்புதல் வாங்க வேண்டும் என கூறியுள்ளது. இதை தொடர்ந்து, கடன் EMI செலுத்த முடியாமல் போன காரணத்தை பற்றி வங்கி மேலாளரிடம் பேசி, கடன் காலத்தை நீட்டிக்க அல்லது வேறு ஏதேனும் தீர்வைக் காணலாம்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


























