விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் புதுவரவு – ரசிகர்கள் மகிழ்ச்சி! ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலமான ரக்ஷிதா இந்த சீரியலில் இணைய உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அனைத்து சீரியல்களுமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்தவகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கூட்டுக் குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், பாசப் போராட்டங்கள் என அனைத்தையும் அப்படியே படம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் யாருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பிரச்சினையை போக்குவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய பலமாகும்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!
ஒவ்வொரு நாளும் இந்த குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தற்போதுதான் மிகப்பெரிய பிரச்சினை அனைத்தையும் தாண்டி சூப்பர் மார்க்கெட் ஒன்றை திறந்தனர். இதனை அடுத்து மீண்டும் ஒரு பிரச்சனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உருவாகியுள்ளது. அதாவது முல்லையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் ஒருவர் கதிரிடம் கூறியுள்ளார். முல்லைக்கும் குடும்பத்தினருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டால் மிகப்பெரிய பிரச்சினை ஆகிவிடும் என பயந்து இந்த விஷயத்தை குடும்பத்தினர்கள் மற்றும் முல்லையிடம் இருந்து கதிர் மறைத்து விடுகிறார்.
முல்லைக்கு குழந்தை பிறக்காது என நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் கதிருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது முல்லை தான் கர்ப்பமாக இருப்பதாக கதிரிடம் கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும் என கதிர் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சீரியலில் மற்றொரு திருப்பம் வரப்போகிறது. அதாவது சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலமான ரக்ஷிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரக்ஷிதா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை.