ஜீவாவின் பொறுப்புகளை கவனிக்கும் ஐஸ்வர்யா, தொலைந்து போகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை பணம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
ஜீவாவின் பொறுப்புகளை கவனிக்கும் ஐஸ்வர்யா, தொலைந்து போகும்
ஜீவாவின் பொறுப்புகளை கவனிக்கும் ஐஸ்வர்யா, தொலைந்து போகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கடை பணம் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஜீவாவின் பொறுப்புகளை கவனிக்கும் ஐஸ்வர்யா, தொலைந்து போகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை பணம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி ” பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவின் அப்பா நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜீவா அவருடைய தொழிலை கவனித்துக் கொள்ள போகிறார். இந்நிலையில் அடுத்து வரப் போகும் திருப்பங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புது கடை திறந்து நல்லபடியாக வியாபாரம் சென்று கொண்டிருக்கிறது. கதிர், மூர்த்தி, ஜீவா, கண்ணன் ஆகியோர் கடையை கவனித்து கொள்ள ஐஸ்வர்யாவும் கடை பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இந்நிலையில் வீட்டில் இடம்போதவில்லை என்பதால் அடிக்கடி பிரச்சனை வருகிறது. தனம் மூர்த்தி ஹாலில் பாண்டியனுடன் படுப்பதால் பாண்டியனுக்கு காய்ச்சல் வருகிறது. அதனால் தனத்தின் அம்மா சண்டை போட குடும்பத்தில் அனைவரும் புது வீடு கட்ட வேண்டும் என நினைக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் ஷாக்!

அதனால் ஜீவா ஒரு திட்டம் சொல்கிறார். அதன் படி இந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்கின்றனர். தினமும் ஒருவர் வந்து இந்த வீட்டை வாங்க கேட்கிறார். இந்நிலையில் மீனாவின் அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் இருக்கிறார். இனிமேல் அவர் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர் சொல்லி இருக்கிறார். அதனால் இனிமேல் அவரது வேலைகளை ஜீவா கவனிப்பார் என மூர்த்தி மீனாவின் அப்பாவிற்கு வாக்கு கொடுக்கிறார். புது கடை இப்போது தான் திறந்து இருப்பதால் ஜீவா இல்லாமல் கடையில் வேலைகளை பார்க்க ஆள் இல்லை.

ராதிகா வீட்டில் இருக்கும் கோபி, செல்வி உடன் திடீரென வந்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில் நாளைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மூர்த்தி கடையில் ஜீவாவை கூப்பிட அவர் தான் மீனாவின் கடையில் இருப்பதாக சொல்கிறார். ஆமாம் மறந்துவிட்டேன் என மூர்த்தி சொல்ல, பேங்க் போக வேண்டும் ஜீவா இல்லாமல் என்ன ஆக போகுதோ என மூர்த்தி கேட்க ஐஸ்வர்யா நான் பேங்க் போகிறேன் என சொல்கிறார். என்ன வேலை செய்ய வேண்டும் என கேட்க இந்த பணத்தை அக்கவுண்டில் போட வேண்டும் என சொல்கிறார். அடுத்து வரும் எபிசோடில் ஐஸ்வர்யா பணத்தை தொலைத்துவிட போகிறார். அதனால் குடும்பத்தில் மீண்டும் பிரச்சனை வர போகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!